மாவை சேனாதிராஜாவின் மறைவு உலகவாழ் தமிழ் மக்களுக்கு பாரிய இழப்பு

Date:

பாறுக் ஷிஹான்

தமிழ் தேசிய அரசியல் வரலாற்று ஆளுமைகளுள் தவிர்க்க முடியாத ஒருவராக செயல்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் மறைவு தமிழ் மக்களுக்கும் இலங்கை தமிழரசு கட்சிக்கும் பாரிய இழப்பாகும் என சமூக செயற்பாட்டாளரும் நாபீர் பவுண்டேஷன் நிறுவனமான சட்டத்தரணி உதுமான் கண்டு நாபீர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘மாவை சேனாதிராஜா தனது 64 வருட அரசியல் பயணத்தில் அரசியல் தலைவராக தமிழ் மக்களுக்காக கடும் பணியாற்றியுள்ளார்.

யுத்தம் முடிவுறுவதற்கு முன்னரும் பின்னரும் இவரது அரசியல் முன்னெடுப்புகள் பல்வேறு பரிணாமங்களை கொண்டுள்ளதுடன் மக்கள் விடுதலைக்காக போராட்டங்கள் பலவற்றை செய்து சிறைவாசம் அனுபவித்தவர். ஜனநாயக நீரோட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலங்களில் இவரது குரல் அடக்குமுறைக்கு எதிரான மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலித்தது.

இவரது பிரிவில் துயருறும் அன்னாரது குடும்பத்தாருக்கும் உலக வாழ் தமிழ் மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என சமூக செயற்பாட்டாளரும் நாபீர் பவுண்டேஷன் நிறுவனருமான சட்டத்தரணி உதுமான் கண்டு நாபீர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மாணவர்களை உள்ளீர்க்கும் செயற்பாடுகளில் எந்தவித முறைகேடுகளும் நடைபெறவில்லை

கிருஷ்ணகுமார் பாடசாலையில் தரம் ஒன்றிற்கோ அல்லது தரம் ஆறாம் ஆண்டுக்கோ மாணவர்களை உள்ளீர்க்கும்...

குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட 40 பேர் கைது

கிருஷ்ணகுமார் குற்றச்செயல்களுடன் தொடர்பு பட்ட 42 பேர் காத்தான்குடி பொலிஸார் நடாத்திய திடீர்...

மாடு திருடிய தாக்கப்பட்ட நபர் உயிரிழப்பு

கிருஷ்ணகுமார் மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவில் மாடுகளை திருடிய நபர் ஒருவர்...

கட்டாக்காலி மாடுகள் உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை

பாறுக் ஷிஹான் இவ்விடயத்தை கடிதம் ஒன்றின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளதுடன் இரவு நேரங்களில் பயணிக்கும்...