திருகோணமலை – கம்பகொட்ட பகுதியில் வெள்ளிக்கிழமை (24) யானை தாக்கியதில் ஒருவர் படுகாயமடைந்து, திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

படுகாயமடைந்த நபர் திருகோணமலை எத்தாபெந்திவெவ பகுதியில் வசிக்கும் 42 வயதான சின்தக விமலசேன என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் அறியப்படுவதாவது, குறித்த நபர் வயல் காவலுக்கு சென்றபோது வயலுக்குள் நின்ற யானையை விரட்ட முற்பட்டதாகவும், அப்போது யானை அவரை துரத்தி தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அவரை மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்த பிறகு, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றியுள்ளனர்.