பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் அபிவிருத்தி குழுத் தலைவரும் அரசியல் பேரவை உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவாவை வரவேற்று வாழ்த்தி கௌரவிக்கும் நிகழ்வு சனிக்கிழமை (15) அவரது தாய்ப் பாடசாலையான கல்முனை கமு/கமு/ சாஹிரா தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.

கல்லூரியின் முதல்வர் எம். ஐ. ஜாபீர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவாவிற்கு பாடசாலை சமூகத்தினரால் பொன்னாடை போற்றி நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வில், பாடசாலையின் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மற்றும் கல்வி சாரா உத்யோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
