நிந்தவூரின் விளையாட்டுத்துறை தொடர்பில் கலந்துரையாடல்

பாறுக் ஷிஹான்

நிந்தவூரின் விளையாட்டுத்துறை பின்தங்கிய நிலையில் உள்ளதற்கான காரணங்களை கண்டறிந்து அதற்கு புத்துயிரளிக்கும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் நிந்தவூரின் விளையாட்டு துறை சார்ந்த பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலொன்று திங்கட்கிழமை (03) மேற்கொண்டிருந்தார்.

இக்கலந்துரையாடலில் பாடசாலை முதல் சர்வதேச மட்டத்திற்கு விளையாட்டு வீரர்களை உருவாக்குவதில் உள்ள தடைகள் முன் வைக்கப்பட்ட நிலையில் அவற்றை நிவர்த்தி செய்வதற்கான தீர்வு திட்டங்களும் ஆலோசிக்க பட்டிருந்தது.

மேலும், தொடர் முயற்சியின் மூலம் எமது வீரர்களை உருவாக்குவது என்ற அடிப்படையில் நாம் தொடர்ச்சியாக செயல்படுவதை உறுதி எடுக்கப்பட்டிருந்த குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் விளையாட்டு ஆசிரியர்கள், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் துறை சார்ந்த பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *