நோன்பு காலத்திற்கான நாபீர் பௌண்டேசனின் உலருணவு விநியோகம்

Date:

பாறுக் ஷிஹான்

வருடாவருடம் நாபீர் பௌண்டேசன் மேற்கொள்ளும் புனித ரமழான் நோன்பு காலத்திற்கான உலருணவு விநியோகம் திங்கட்கிழமை (3) மாலை சம்மாந்துறை புறநகர் பகுதியில் நாபீர் பௌண்டேசனின் ஸ்தாபகரும் பிரபல சமூக செயற்பாட்டாளரும் ECM நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் பொறியியலாளருமான உதுமான்கண்டு நாபீர் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வானது பிரதான மார்க்க சொற்பொழிவுடன் கிறாஅத் ஓதப்பட்டு ஆரம்பமானதுடன் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது நிகழ்வின் ஏற்பாட்டாளர் உதுமான்கண்டு நாபீர் தற்சார்பு பொருளாதாரத்தின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றியதுடன் சகல மக்களும் நாட்டின் அபிவிருத்திக்காக கைத்தொழில் ஒன்றினை மேற்கொள்ளுதல் வேண்டும் என கேட்டுக்கொண்டார்.நிகழ்வில் ஊடகவியலாளர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

குறித்த உலருணவு பொருட்களில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் உள்ளடங்குவதுடன் சுமார் இதுவரை 100 க்கும் அதிகமான குடும்பங்களுக்கு இப்பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

சம்மாந்துறையில் வெசாக்தின அன்னதானம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பொலிஸ்...

சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் வெசாக் தின நிகழ்வு

தேசிய வெசாக் வாரத்தை முன்னிட்டு சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் விசேட வெசாக்...

வாழைச்சேனையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

வாழைச்சேனை துறைமுகத்தில் இன்று (13) மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க...

மட்டக்களப்பு நகரில் வெசாக்தின நிகழ்வு

தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு நகரில் இன்று மாலை பல்வேறு...