இறக்காமம் பொலிஸ் நிலையத்தின் புதிய நிலையப் பொறுப்பதிகாரி பதவியேற்பு

பாறுக் ஷிஹான்

இறக்காமம் பொலிஸ் நிலையத்தின் புதிய நிலையப் பொறுப்பதிகாரியாக பிரதான பொலிஸ் பரிசோதகர் எச்.எம்.பி.பிரியந்த பதவி ஏற்றுக்கொண்டார்.

திங்கட்கிழமை (17) அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் நிலையத்தின் இரண்டாவது பொறுப்பதிகாரியாக அவர் பொறுப்பேற்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களில் தமன பொலிஸ் பிரிவின் கீழிருந்து இறக்காமம் பிரதேசம் 2021ல் தனியான பொலிஸ் பிரிவாக மாற்றப்பட்டது. இதன் பொது இறக்காமம் பொலிஸ் நிலையத்தின் முதலாவது புதிய பொறுப்பதிகாரியாக அன்று மஹிந்த சேனாரத்ன என்பவர் பொறுப்பேற்று பின்னர் தனது மூன்று வருட சேவையின் பின் இடமாற்றலாகி சென்றமை குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *