மருதமுனை பிரதேச மக்களுக்கான அறிவித்தல்
மருதமுனை பிரதேச மக்களுக்கான அறிவித்தல் எனும் தலைப்பில் மருதமுனை அனைத்துப் பள்ளிவாசல்கள் அமையம் எனும் பெயரில் துண்டுப்பிரசுரம் ஒன்று விநியோகிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பகுதியில் வாழும் மக்களுக்கான குறித்த அறிவித்தல் தொடர்பில் பல்வேறு விடயங்கள் அத்துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.அத்துடன் மருதமுனை அனைத்துப் பள்ளிவாசல்கள் அமையம் அண்மையில் கூட கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸாரையும் சந்தித்து கலந்துரையாடி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
மருதமுனையின் தற்போதைய நிலை – மாணவர்கள் நலன் – இளைஞர்களின் போக்கு, மருதமுனையின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
பாறுக் ஷிஹான்


