சமூக செயற்பாட்டாளர் உதுமான்கண்டு நாபீரின் மே தின வாழ்த்துச்செய்தி

Date:

உழைக்கும் மக்களின் மகிழ்ச்சியான வாழ்வே எமது இலட்சியமாகும். உழைக்கும் மக்களாகிய உங்களனைவரதும் மகிழ்ச்சியும் நிம்மதியுமான வாழ்வுக்காக எமது கட்சி என்றும் ஓயாது பயணிக்குமென்று உறுதி கூறுவதோடு உழைக்கும் மக்களாகிய உங்களனைவருக்கும் மே தின வாழ்த்துக்களை கூறிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என சமூக செயற்பாட்டாளரும் பொறியியலாளருமான உதுமான்கண்டு நாபீர் தெரிவித்தார்.

சர்வதேச தொழிலாளர் தினம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது: சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ரஷ்யா என்று பல தேசங்களிலும் ஆடை மற்றும் இரும்புத் தொழிற்சாலைகள் சார்ந்து பெரும் முதலாளிகள் உருவாகத் தொடங்கினர்.

இந்த முதலாளிகள் கூலித் தொழிலாளர்களை கசக்கிப் பிழிந்து ஈவிரக்கமற்ற முறையில் வேலை வாங்கினர்.

நாள் ஒன்றுக்கு சுமார் 15 மணி நேரத்துக்கும் மேலாக தொழிற்சாலைகளில் மக்கள் அடிமைகளாக வேலை செய்ய வேண்டி இருந்தது.

இந்நிலைமையை மாற்றுவதற்காக தொழிலாளர்கள் நடத்திய பல்வேறுபட்ட போராட்டங்களின் விளைவாகவே நாளொன்றுக்கு 8 மணி நேர வேலை என்பதை இவ்வுலகம் படிப்படியாக ஏற்றுக்கொண்டது.

இந்த உரிமையை வென்றெடுப்பதற்காக நடத்தப்பட்ட போராட்டங்களும் கைதுகளும் சிறைக் கொடுமைகளும் உயிரிழப்புகளும் சொல்லிமாளாதவை.

அந்த நினைவுகளை முன்வைத்தே மே முதல் நாளை தொழிலாளர் தினமாக நாம் அனுஷ்டித்து வருகிறோம்.அவைகளெல்லாம் கடந்த நூற்றாண்டு கதைகள்.

ஆனால் இன்றும் கூட நமது தொழிலாளர் வர்க்கத்தின் உழைப்பு சுரண்டப்படுவது முடிந்த பாடில்லை. எமது மாகாணத்தை எடுத்துப்பாருங்கள் இங்கே நிறைந்து வாழும் விவசாயிகளும், மீனவர்களும் நாளும் பொழுதும் உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து போகின்றனர். எப்படித்தான் உழைத்தாலும் ஏழ்மை அவர்களை விட்டு தொலைந்தபாடில்லை.

இதற்கு காரணமென்ன? சுரண்டல், சுரண்டல். ஆம் மூலதனத்தை கையிலே வைத்திருக்கும் முதலாளிகள் எமது மக்களின் உழைப்பை வியாபாரம் எனும் பெயரில் உறுஞ்சிக்கொண்டிருக்கின்றார்கள்.

அது மீனாக இருக்கலாம்.நெல்லாக இருக்கலாம். வெள்ளரிக்காயாக இருக்கலாம். ஆடு மாடு கோழியாக கூட இருக்கலாம். அனைத்திலும் கொள்ளை இலாபம் தலைவிரித்தாடுகிறது.

வியாபாரம் என்பது எமது மக்களின் கையில் இல்லை. இவை குறித்தெல்லாம் நாம் தீவிரமாக கவனம் கொண்டுள்ளோம். உழைக்கும் மக்களின் மகிழ்ச்சியான வாழ்வே எமது இலட்சியமாகும்.

உழைக்கும் மக்களாகிய உங்களனைவரதும் மகிழ்ச்சியும் நிம்மதியுமான வாழ்வுக்காக எமது கட்சி என்றும் ஓயாது பயணிக்குமென்று உறுதி கூறுவதோடு உழைக்கும் மக்களாகிய உங்களனைவருக்கும் மே தின வாழ்த்துக்களை கூறிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

பாறுக் ஷிஹான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

சம்மாந்துறையில் வெசாக்தின அன்னதானம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பொலிஸ்...

சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் வெசாக் தின நிகழ்வு

தேசிய வெசாக் வாரத்தை முன்னிட்டு சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் விசேட வெசாக்...

வாழைச்சேனையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

வாழைச்சேனை துறைமுகத்தில் இன்று (13) மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க...

மட்டக்களப்பு நகரில் வெசாக்தின நிகழ்வு

தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு நகரில் இன்று மாலை பல்வேறு...