மட்டுவில் 139 போட்டி சபைகள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது

Date:

கிருஷ்ணகுமார்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் நான் அரசியல் கட்சிகள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எம்.எஸ்.எம்.சுபியான் தெரிவித்தார்.

இதேநேரம் இம்முறை உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக இறுதி தினமான இன்றுடன் மொத்தமாக 19கட்சிகளும் 25சுயேட்சைக்குழுக்களுமாக 139 போட்டி சபைகளுக்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எம்.எஸ்.எம்.சுபியான் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 17ஆம் திகதி தொடக்கம் வேடம்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தல்களில் மட்டக்களப்பு மாவட்டத்திலுளள உள்ளூர் அதிகார சபைகளில் போட்டியிட மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையில் தேசிய மக்கள் சக்தி வேட்பு மனுக்களை தாக்கல் செய்தது

அதேநேரம் காத்தான்குடி தவிர ஏனைய மாவட்டத்தில் உளள 11 சபைகளிலும் போட்டியிட இலங்கை தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தலைமையிலும் தேசிய மக்கள் சக்தி கல்குடா தொகுதியில் உள்ள சபைகளில் போட்டியிட அதன் அமைப்பாளர் எம் திலீப் குமார் தலைமையிலும் வேட்புமனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன.

இதேநேரம் மட்டக்களப்பு மாநகர சபையில் ஐக்கிய மக்கள் சக்தி அதன் அமைப்பாளர் ரகுராம் தலைமையில் இன்று வேட்பு மனுக்களைத்; தாக்கல்செய்யப்பட்டன.

இதேபோன்று மக்கள் போராட்ட முன்னணியும் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவினை தாக்கல்செய்துள்ளது.அத்துடன் ஐக்கிய குடியரசு முன்னணி என்னும் சம்பிக்க ரணவக்கவின் கட்சியும் வேட்பு மனுக்களை தாக்கல்செய்துள்ளது.

இதேநேரம் மாவட்டத்தில் உள்ளூர் அதிகார சபைகளில் போட்டியிடுவதற்கான பல சுயேச்சை குழுக்கள் நியமன பத்திரங்களை தாக்கல் செய்துள்ளன.

மட்டக்களப்பு மாநகர சபை காத்தான்குடி மற்றும் ஏறாவூர் நகர சபைகள் அடங்கலாக மாவட்டத்தில் 12 உள்ளாட்சி சபைகளுக்காக தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினை: தீர்ப்பு ஒத்திவைப்பு

வீதிகளை மறித்துபோராட்டம் நடாத்தியதன் மூலம் ஜனாதிபதியாக வந்தவரே ரணில்விக்ரமசிங்க,அவரின் வருகைக்காக வீதியில்...

மாளிகைக்காடு மேற்கு வட்டார தேர்தல் காரியாலய திறப்பு விழா

காரைதீவு பிரதேச சபை தேர்தலுக்கான ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கட்சியின் மாளிகைக்காடு...

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நினைவஞ்சலி நிகழ்வு

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி இது...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: 6 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலுக்குள்ளான மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு முன்பாக உயிர்த்த ஞாயிறு தற்கொலை...