வறுமை மாணவர்களின் கல்வி தடையாக இருக்ககூடாது

Date:

கிருஷ்ணகுமார்

வறுமையானது மாணவர்களின் கல்விக்கு என்றும் தடையாக இருக்ககூடாது. அதனை கடந்து மாணவர்கள் கற்கவேண்டும் என குளோபல் வின்ங்ஸ் சேரிட்டி அமைப்பின் ஸ்தாபகர் சோ.கோபிகிருஷ்ணா தெரிவித்தார்.


வறுமையான மாணவர்கள் சாதணையாளர்களாக மாறும்போது வறுமையென்ற நிலையென்பது அகற்றப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியகல்லாறு மத்திய கல்லூரி மற்றும் உதயபுரம் தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் வறிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கும் நிகழ்வு இன்று பெரியகல்லாறு மத்திய கல்லூரி ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.


இந்த நிகழ்வானது பெரியகல்லாறு மத்திய கல்லூரியின் அதிபர் ராஜேந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக குளோபல் வின்ங்ஸ் சேரிட்டியின் ஸ்தாபகர் சோ.கோபிகிருஷ்ணா அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.


பெரிய கல்லாற்றில் வறுமை கோட்டின் வாழ்கின்ற 130 மாணவர்களுக்கான பாதனிகள் இந்த நிகழ்வின் போது வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கௌரவ அதிதிகளாக உதயபுரம் பாடசாலையினுடைய அதிபர் உ.கோகுலராஜ் அவர்களும் சர்வார்த்த ஸ்ரீசித்தி விநாயகர் ஆலய முன்னாள் வண்ணக்கர் நே.காமல்ராஜ் அவர்களும் மற்றும் பிரதி அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மட்டு மாவட்ட செயலகத்தில் இப்தார் நிகழ்வு

கிருஷ்ணகுமார் இனங்களிடையே ஐக்கியத்தினையும் ஒற்றுமையினையும் ஏற்படுத்தும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் ஏற்பாடு...

முன்னால் அமைச்சர் கைது: இளைஞர்கள் கொண்டாட்டம்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணக்குழு கைது...

அம்பாறை மாவட்ட செயலகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்ட செயலகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு அம்பாறை...

உலக காசநோய் தினத்தினை முன்னிட்டு விழிப்பூட்டல் கருத்தரங்கு

(பாறுக் ஷிஹான்) உலக காசநோய் தினத்தை முன்னிட்டு காசநோய் பரவுதல் பற்றியும், அதைத்...