மூத்த பத்திரிகையாளர் இராஜநாயகம் பாரதிக்கு அஞ்சலி நிகழ்வு

Date:

கிருஷ்ணகுமார்

மூத்த பத்திரிகையாளர் இராஜநாயகம் பாரதி அவர்களின் இழப்பு தமிழ் ஊடகத்துறைக்கு பேரிழப்பாகும் என மட்டு ஊடக அமையம் தெரிவித்துள்ளது.

மறைந்த மூத்த ஊடகவியலாளர் அமரர் இராசநாயகம் பாரதி அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு சனிக்கிழமை (15) மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்றது.

மட்டு ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கிலங்கை பத்திரிகையாளர் சங்கம் ஆகியனவற்றின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

மட்டு ஊடக அமைய தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத், தமிழீழ விடுதலை இயக்கத்தின் உபதலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண பிரதி தவிசாளருமான பிரசன்னா இந்திரகுமார் மற்றும் ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது மூத்த ஊடகவியலாளர் அமரர் இராஜநாயகம் பாரதி அவர்களின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அகவணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து நினைவுரைகள் இடம்பெற்றன.

இதன்போது கருத்து தெரிவித்த ஊடக அமையத்தின் செயலாளர் செ.நிலாந்தன்,

மூத்த பத்திரிகையாளர் இராஜநாயகம் பாரதி அவர்களின் மறைவு தமிழ் ஊடகத்துறைக்கும், ஒடுக்கப்பட்ட இனத்தின் உரிமைக்கான போராட்டத்திற்கும் பேரிழப்பாக மாறியுள்ளது.

யுத்தம் நடைபெற்ற காலத்திலும், யுத்தத்திற்கு பின்னரான காலத்திலும் தமிழ் தேசியத்தை பாதுகாப்பதில் மிகவும் துணிச்சலுடன் செயற்பட்டவர் பாரதி அண்ணன்.

இலங்கையில் சுமார் 35 ற்கு மேற்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட போதும். தமிழ் ஊடகத்துறை மீது மிகப்பெரிய அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்ட போதும் தென்னிலங்கையில் இருந்து கொண்டு மிகவும் துணிவுடன் தமிழ் மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவந்தவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

சம்மாந்துறையில் வெசாக்தின அன்னதானம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பொலிஸ்...

சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் வெசாக் தின நிகழ்வு

தேசிய வெசாக் வாரத்தை முன்னிட்டு சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் விசேட வெசாக்...

வாழைச்சேனையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

வாழைச்சேனை துறைமுகத்தில் இன்று (13) மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க...

மட்டக்களப்பு நகரில் வெசாக்தின நிகழ்வு

தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு நகரில் இன்று மாலை பல்வேறு...