30 சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது

Date:

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 06கட்சிகளும் 09 சுயேட்சைக்குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும் இதுவரையில் 30 சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் எஸ்.சுபியான் தெரிவித்தார்.

உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தி வருகின்றது.

மட்டக்களப்பு நகரில் உள்ள தேர்தல் அலுவலத்தில் இன்றைய தினம் அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் தலைமையில் இன்று கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மட்டக்களப்பு மாநகரசபை உட்பட 11உள்ளுராட்சிமன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டதாக பிரசாந்தன் தெரிவித்தார்.

இதேபோன்று ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் அக்கட்சியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளர் தயானந்தன் தலைமையில் இன்று கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

மண்முனைப்பற்று, மண்முனை மேற்கு பிரதேசபைகளுக்கு போட்டிடுவதற்காக இந்த கட்டுப்பணம் இன்று காலை செலுத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கதிர்காமம் பாத யாத்திரைக்கான காட்டுப்பாதை திறப்பு

வரலாற்று சிறப்பு மிக்க கதிர்காம திருத்தலத்திற்கான பாதை யாத்திரைக்காக குமுண தேசிய...

மரக்கறி விற்பனை போர்வையில் போதைப்பொருள் விற்பனை

மரக்கறி விற்பனை என்ற போர்வையில் போதைப் பொருட்களை சூட்சுமமாக விற்பனை செய்த...

புதிய கட்டிடம் திறந்து வைப்பு

சம்மாந்துறை நில அளவை திணைக்களத்திற்கான புதிய கட்டிடம் திறந்து வைக்கும் நிகழ்வு...

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 11வது புதிய துணைவேந்தர் கடமைகளைப் பொறுப்பேற்பு

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 11வது புதிய துணைவேந்தராக பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் கடமைகளைப்...