தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 17வது பட்டமளிப்பு விழா

Date:

இலங்கை தென்கிழக்குப் பல் கலைக்கழகத்தின் 17ஆவது ஆண்டு பொது பட்டமளிப்பு விழா சனிக் கிழமை(03) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (04) இரு தினங்களாக பல்கலைக்கழகத்தின் பிரதான அரங்கில் நடைபெற்றது.

ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி பாயிஸ் முஸ்தபாவின் முன்னிலையில் பதில் உபவேந்தர் யூ.எல்.மஜீத் தலைமையில் சனி மற்றும் ஞாயிறு இரு தினங்களாக நடைபெற்ற இந்தப் பட்டமளிப்பு விழாவில் ஆறு அமர்வுகளில் 2077 மாணவர்கள் பட்டங்களைப் பெற்றனர்.

முதலாம் நாள் முதல் அமர்வில் இலங்கை உயர் நீதிமன்ற நீதிபதி யசந்த கொடகொடவும் இரண்டாம் அமர்வில் களனி பல் கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறை பேராசிரியர் கலாநிதி சீதா.பி. பண்டாரவும் மூன்றாவது அமர்வில் இலங்கைக்கான சவூதி அரேபிய நாட்டின் தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானியும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

இரண்டாம் நாளான இன்று முதல் அமர்வில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவின் துணைத்தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கே.எல் வசந்த குமாரவும் இரண்டாம் அமர்வில் ரஜரட்ட பல்கலைக் கழகத்தின் சுற்றுலா மற்றும் விருந் தோம்பல் முகாமைத்துவ துறையின் பேராசிரியர் கலாநிதி மனோஜ் சமரதுங்கவும் மூன்றாவது அமர்வில் யாழ் பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்பு பீடத் தின் பீடாதிபதி சிரேஷ்ட பேராசிரியர் ரீ. வேல்நம்பியும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

பிரயோக விஞ்ஞான பீடத்தில் 172 மாணவர்களும் பொறியியல் பீடத்தி லிருந்து 82 மாணவர்களும் தொழினுட்பவியல் பீடத்திலிருந்து 102 மாண வர்களும் கலை கலாச்சார பீடத்திலிருந்து 314 மாணவர்களும் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்திலிருந்து 342 மாணவர்களும் முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்திலிருந்து 378 மாணவர்களும் வெளிவாரி பட்டப் படிப்பு மாணவர்கள் 687 மாணவர் களுமாக 2077 மாணவர்கள் பட்டங்களைப் பெறவுள்ளதாக பதிவாளர் எம். ஐ. நௌபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாறுக் ஷிஹான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

றவூப் ஹக்கீம் குறுஞ்செய்தி ஊடாக இயங்கும் டம்மி தலைவர்

றவூப் ஹக்கீம் என்பவர் கட்சி கட்டுப்பாட்டினை மீறி செயற்படும் ஒரு சர்வதிகாரியே...

முள்ளிவாய்க்காலில் நடந்த அவலம் காரணமாக தமிழினம் அழிவினை சந்தித்திருக்கின்றது

எதிர்வரும் மே மாதம் 12ஆம் திகதி முதல் மே மாதம் 18ஆம்...

தமிழ் இன அழிப்பு வாரம்…

தற்போதைய அரசாங்கமும் தமிழ் தேசிய இனத்தினை உதாசீனப்படுத்துகின்ற, அலட்சியப்படுத்துகின்ற, அவர்களின் நியாயமான...

29 கைதிகள் விடுதலை

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் இன்று...