
தேசிய வெசாக் வாரத்தை முன்னிட்டு சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் விசேட வெசாக் தின நிகழ்வு பொலிஸ் நிலைய வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது நிலைய பொறுப்பதிகாரி ஐ.எல்.ஏ.கபூர் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் போது கலந்து கொண்டவர்கள் மற்றும் வீதியால் பயணித்த பயணிகள் உள்ளிட்டோருக்கு மரவள்ளிக் கிழக்கு அன்னதான (தன்ஸல்) வழங்கப்பட்டது. வைக்கப்பட்டது.

கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் வழிகாட்டலில் இந்த நிகழ்வில் சர்வமத தலைவர்கள், வேப்பையடி இராணுவ முகாம் பொறுப்பதிகாரி, மத்திய முகாம் காவல் நிலைய பொறுப்பதிகாரி, சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள், உயர் இராணுவ அதிகாரிகள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
வெசாக் போயா தினத்தை முன்னிட்டு பொலிஸ் தலைமை அலுவலகத்தில் வெசாக் கூடுகள் கட்டப்பட்டு அலங்காரங்கள் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பாறுக் ஷிஹான்