நீதிமன்ற வளாகத்தில் சந்தேகநபர் தப்பியோட்டம்

Date:

பாறுக் ஷிஹான்

கல்முனை நீதிமன்ற வளாகத்தில் இருந்து சந்தேகநபர் ஒருவர் தப்பியோடியதால், கல்முனை தலைமையக பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று (13), அம்பாறை மாவட்டம் கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட குறித்த நபர், விசாரணை முடிந்த பின்னர் பிணை வழங்கப்பட்டார்.

எனினும், பிணையாளிகள் இன்மையால், அவர் நீதிமன்ற வளாகத்திலேயே சிறைக்கூடத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அதே நேரத்தில், குறித்த நபர் சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பி, நீதிமன்ற சுவரில் ஏறி தப்பிச் சென்றதாக காண்முகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவத்தில் தொடர்புடையதாக இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

தப்பிச் சென்ற சந்தேகநபர் சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த 28 வயதானவராக இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

வேட்பு மனுக்களை தாக்கல் செய்த நாபீர் பவுண்டேஷனின் சுயேட்சை குழு

பாறுக் ஷிஹான் அம்பாறை உள்ளூராட்சி மன்றங்களில் சம்மாந்துறை பிரதேச சபைக்கான வேட்பு மனுக்களை...

QR code மூலமான முறைப்பாட்டை உரிய ஆதாரங்களுடன் முன்வையுங்கள்

பாறுக் ஷிஹான் நோன்பு கால உணவுப் பாதுகாப்பின் நிமிர்த்தம் சாய்ந்தமருது சுகாதார வைத்திய...

தென் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் புதன்கிழமை (19)...

பெண்கள் விடுதி சிற்றுண்டி சாலைக்கு அபராதம்

பாறுக் ஷிஹான் நோன்பு கால உணவுப் பாதுகாப்பின் நிமிர்த்தம் சம்மாந்துறை சுகாதார வைத்திய...