401வது ஆண்டை நிறைவு செய்யும் தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயம்

Date:

கிருஷ்ணகுமார்

மட்டக்களப்பு தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயத்தின் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

கிழக்கு மாகாணத்தில் மிக பழமையான தேவாலயங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயத்தின் 401வது வருடாந்த திருவிழா, நேற்று (24) மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்தந்தை ஜுலியன் பிரான்சிஸின் தலைமையில் விசேட ஜெபமாலை வழிபாடு நடைபெற்றது. திருவுருவம் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு, கொடியேற்ற இடத்தில் விசேட வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டது.

ஆலயத்தின் பங்கு மக்களின் குழுத்தலைவர்களின் பங்களிப்புடன் பங்குத்தந்தையால் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து தேவாலயத்தில் விசேட திருப்பலி பூஜையும் நடைபெற்றது.

இந்த நிகழ்வின் போது ஆலயத்திற்குள் மாதா மற்றும் ஜோசப்வாஸ் ஆகியோருக்கு அமைக்கப்பட்ட பீடங்கள் ஆசிர்வதிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து அருட்தந்தை ஜே.அனிஸ்ரன் அடிகளாரின் தலைமையில் முதலாம் நவநாள் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த கொடியேற்ற விழாவில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இதன்படி, எதிர்வரும் பெப்ரவரி 01ஆம் திகதி மாலை சுற்றுப்பிரகாரம் நடைபெறும், மேலும் பெப்ரவரி 02ஆம் திகதி காலை திருவிழா திருப்பலி நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பஸ் மோதியதில் இருவர் பலி

கிருஷ்ணகுமார் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இன்று காலை (16) இடம்பெற்ற விபத்தில்...

தேவபுரம் பகுதியில் ஆண் சிசுவின் சடலம் மீட்பு

கிருஷ்ணகுமார் மட்டக்களப்பு - முறக்கொட்டாஞ்சேனை - தேவபுரம் பகுதியிலுள்ள புதர்க்காட்டுப்பகுதியில் காணப்பட்ட ஆண்...

பெரும்போக வேளாண்மை அறுவடை முன்னெடுப்பு

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக வேளாண்மை அறுவடைப் பணிகள் மீண்டும் இன்று...

பொல்லால் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

கிருஷ்ணகுமார் மதுபானம் அருந்த சென்ற நான்கு நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்தர்கத்தையடுத்து ஒருவர் மீது...