
இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் மட்டக்களப்பு ஏறாவூர்ப் பற்று பிரதேச சபையின் கொம்மாதுறை வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளரின் மக்கள் சந்திப்பு இன்று (20) ஒரு முழச்சோலையில் நடைபெற்றது.
இம்மக்கள் சந்திப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் , இ.சிறிநாத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இம் மக்கள் சந்திப்பில் தமிழ் மக்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு வாக்களிப்பதற்கான அவசியம் தொடர்பாகவும் தெளிவூட்டப்பட்டது.
