மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலிருந்து செங்கலடி பிரதேசத்துக்கு சட்ட விரோதமாக மான் இறைச்சி கொண்டுசென்ற இருவரை புதன்கிழமை (09)பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கரடியனாறிலிருந்து பட்டா ரக சிறிய வாகனத்தில் சுமார் 20 கிலோ மான் இறைச்சி கடத்தியை கொண்டுசென்றபோது செங்கலடி கறுத்த பாலத்தில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஏறாவூர் பொலிஸார் இவர்களை கைதுசெய்ததாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.
இதன்போது கைதுசெய்யப்பட்டவர்கள் செங்கலடி பிள்ளையார் கோவிலைச் சோந்த 32 வயதுடையவர் மற்றும் பங்குடாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடையவர்கள் எனவும், இவர்களையும் கைப்பற்றப்பட்ட இறைச்சி மற்றும் வாகனத்தை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
கிருஷ்ணகுமார்