மான் இறைச்சியுடன் இருவர் கைது

Date:

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலிருந்து செங்கலடி பிரதேசத்துக்கு சட்ட விரோதமாக மான் இறைச்சி கொண்டுசென்ற இருவரை புதன்கிழமை (09)பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கரடியனாறிலிருந்து பட்டா ரக சிறிய வாகனத்தில் சுமார் 20 கிலோ மான் இறைச்சி கடத்தியை கொண்டுசென்றபோது செங்கலடி கறுத்த பாலத்தில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஏறாவூர் பொலிஸார் இவர்களை கைதுசெய்ததாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

இதன்போது கைதுசெய்யப்பட்டவர்கள் செங்கலடி பிள்ளையார் கோவிலைச் சோந்த 32 வயதுடையவர் மற்றும் பங்குடாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடையவர்கள் எனவும், இவர்களையும் கைப்பற்றப்பட்ட இறைச்சி மற்றும் வாகனத்தை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

கிருஷ்ணகுமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மருதமுனை அக்பர் வீதி புனரமைப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் டீ- 100...

விமானப்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பாதை மீண்டும் மக்கள் பாவனைக்கு…

மட்டக்களப்பில் புதுநகர் பகுதியில் விமானப்படையினரின் கட்டுப்பாட்டு எல்லைக்குள் இருந்த பாதை மக்கள்...

இயற்கையுடன் கூடிய பயிற்சி நிலையம் அமைக்க செயற்திட்ட முன்மொழிவு

மட்டக்களப்பு மாந்தீவு பிரதேசத்தில் அமைந்துள்ள தொழுநோய் வைத்தியசாலை நடவடிக்கைகள் நிறைவுற்றுள்ள நிலையில்...

பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு

19.04.2025 அன்று நடைபெற்ற அன்னை பூபதி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வை நடாத்துவதற்கு...